districts

img

‘அதிமுக காற்றோடு கரைந்து விடும்’ நிலக்கோட்டை செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல், மார்ச் 24- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அறிமுக செயல் வீரர்கள் கூட்டம் நிலக்கோட்டை தொகுதியில் சனிக்கிழமையன்று மாலை நடைபெற்றது. வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து  ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டின் மாநில உரி மைகள் பறிபோனதில் அதிமுகவிற்கு முக்கிய பங்கு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக காற்றோடு கரைந்து விடும். நிலக்கோட்டை தொகுதியில் கடந்த தேர்த லில் 36,000 வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. ஆனால், இந்த முறை நாம் 1,36,000 வாக்குகளை பெற்று இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி யில் சிபிஎம் வேட்பாளராக களம் காணும் தோழர் ஆர்.சச்சிதானந்தத்தை வெற்றி பெறச் செய்வோம்.  

நிலக்கோட்டை தொகுதிக்கு தமிழ்நாடு அரசால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் போது கொடைரோடு பகுதி யில் உள்ள வீடுகளை எல்லாம் இடித்து சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாய சூழல் உருவானது. மக்களின் எதிர்காலத்தையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மூலம் வலியுறுத்தப்பட்டு மாற்று பாதை யில் பாலங்களாக சாலை அமைக்கப்பட்டது.

இன்று மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற ஆட்சியாக ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும்’’ என்று கூறினார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார், திமுக ஒன்றியச் செயலாளர் கரிகாலன், தெற்கு ஒன்றியச் செயலாளர் மணி கண்டன், நிலவை பேரூர் கழக செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.