districts

img

பாஜகவிற்கு வாக்களிப்பதும், அதிமுகவிற்கு வாக்களிப்பதும் ஒன்று தான்!

திண்டுக்கல், மார்ச் 12- பாஜகவிற்கு வாக்களிப்பதும், அதிமுகவிற்கு வாக்களிப்பதும் ஒன்று தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் இராமலிங்கம் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலி யம்பாறையில் நடைபெற்ற தேர்தல் நிதி யளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட  அவர் மேலும் பேசுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் கொண்டு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டத்தால் என்ன பாதிப்பு என்று கேட்டாரா இல்லையா? இதை பாஜகவினர் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்கிறார்களோ இல்லையோ நான் எடுத்துச் செல்வேன் என்று பிரச்சாரம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. 

அதேபோல மோடி அரசு குடியுரிமை சட்டம் கொண்டு வந்த போது அதனை  ஆதரித்து வாக்களித்தது தானே அதிமுக?

இதனால் இஸ்லாமிய மக்களும்,  பட்டியல் இன மக்களும் பாதிக்கப்படு வார்கள் என்று இடதுசாரிகள் சொன் னோம். அதற்கு எதிராக போராடி னோம். அதிமுக அந்த சட்டங்களை ஆத ரிக்கவில்லை என்றால் நிறைவேறி யிருக்காது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து வாக்க ளித்து விட்டு இப்போது  எடப்பாடி பழ னிச்சாமி தெரியாமல் செய்துவிட்டேன் என்று தேம்பித் தேம்பி அழுகிறார். 

கடந்த 10 ஆண்டுகளாக மோடி யின் ஊதுகுழலாக இருந்துவிட்டு இப்போது எங்களுக்கும் மோடி ஆட்சிக்கும் எந்த உறவும் இல்லை என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ஜெயலலிதா மர ணத்திற்கு நீதி வேண்டும் என்று தர்ம  யுத்தம் நடத்தினார். அது என்ன ஆனது?  இப்போது ஓபிஎஸ் ஒரு அணி, ஈபிஎஸ் ஒரு அணி, சசிகலா ஒரு அணி, தின கரன் ஒரு அணி என்று அணி அணி யாக பிரிந்து கிடக்கிறார்கள். 

அதிமுகவினர் இப்போது என்ன சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்பீர்கள்? கடந்த காலத்தில் நீங்கள் ஆட்சி நடத்தி னீர்களே, மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தேர்தல் பிரச்சாரத்தில் மோடியா, இந்த லேடியா என்று பிரச்சாரம் செய்தார். அவர் இறந்த பிறகு உங்கள் சட்டைப்பையில் இருந்த அம்மா படத்தை எடுத்துவிட்டு மோடி படத்தை வைத்துக்கொண்டு திரிந்தீர்கள். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு படி மேலே போய் மோடி எங்கள் டாடி என்று சொன்னாரா? இல்லையா? குஜராத் மாடல் குஜராத் மாடல் என்று மோடி சொன்ன போதெல்லாம் ஆதரித்த கட்சி தான் அதிமுக. எனவே, அதிமுகவிற்கு போடுகிற ஓட்டும் பாஜகவிற்கு போடுகிற ஓட்டும் ஒன்று தான்.” 

இவ்வாறு அவர் பேசினார்.

ஆளுநர் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரியா?

இக்கூட்டத்தில் பேசிய, கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், “அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ரவியைச் சந்தித்து தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார். இதனையொட்டி அதிமுகவினர் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 13 பேர் பாஜகவினர் கைதாகியிருக்கிறார்கள். இந்த 13 பாஜகவினர் கைது செய்யப்பட்ட போது என்றைக்காவது எடப்பாடி பழனிச்சாமி வாய்திறந்திருக்கிறாரா? ஆளுநரைச் சந்தித்து பாஜகவினர் மீது புகார் கொடுத்திருக்கிறாரா? அதி முக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக் கிறதா? மேடை போட்டு பாஜகவினரை விமர்சித்திருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. இந்த பிரச்சனையில் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளவரா? 

இன்றைக்கு பல மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தான் மோடி அரசு மிரட்டி வருகிறது. நாட்டில் தின சரி விலைவாசி உயர்ந்து வருகிறது. அதை தடுக்க மோடி என்ன செய்தார்? 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி யை ஒன்றிய பாஜக அரசு குறைத்துள் ளது, அது பற்றியெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டிருப்பாரா?” என்று விமர்சித்தார்.