districts

img

திண்டுக்கல் தவசிமடையில் ஜல்லிக்கட்டு

நத்தம், பிப்.19- திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் அருகே தவசிமடை யில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 19 ஞாயி றன்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது.  போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி,மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 456  காளைகளும், 135 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட னர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடி படாத காளைகளின் உரிமை யாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஜல்லிக் கட்டு பாதுகாப்பிற்காக எஸ்.பி.பாஸ்கரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீ சார்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபட்டி ருந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் உள்பட 21 பேர் காயமடைந்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை தவசிமடை ஊர் பொது மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.