districts

img

கொடைக்கானல் நகராட்சியில் 48 பயனாளிகளுக்கு வீடு

கொடைக்கானல், ஜுன்.10- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் கீழ் அனைவருக்கும் வீடு திட்டத்தின் சார்பில் 4880 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மானியத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடு கட்டிக்கொள்வதற்கான ஆணை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் 48 பயனா ளிகளுக்கு ஆணை வழங் fப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்ட னர்;. செந்தில்குமார் எம்எல்ஏ. பேசுகையில், ரூ. 1.01 கோடி மதிப்பில் பழனி தொகுதி யில் 952 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பழனி ஊராட்சி ஒன்றியம், தாதநாயக்கன் பட்டி ஊராட்சியில் 264 குடும்பங்களுக்கு புதிய வீடு கள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது என் றார். நிகழ்ச்சியில் கொடைக் கானல் நகராட்சித்தலைவர் பா.செல்லத்துரை, துணைத் தலைவர் கே.பி.என்.மாயக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். (நநி)