districts

img

நீட் முதுநிலை தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள்!

திண்டுக்கல், ஆக. 5 - நீட் முதுநிலை தேர்வு மைய குளறு படிகளை சரி செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மக்களவை யில் வலியுறுத்திப் பேசியிருந்தார். மேலும் இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடமும் ஆர். சச்சிதானந்தம் நேரில் மனுக் கொடுத்து வலியுறுத்தினார்.

இதையடுத்து, உடனடியாக இதனை சரி செய்வோம் என்றும், தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரி வித்துள்ளார். 

கடந்த வாரம் சனிக்கிழமையன்று மக்களவையில் நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையின் மீது திண்டுக்கல் மக்கள வைத் தொகுதி உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம் பேசும் போது, நீட் முதுநிலை தேர்வு அறிவிப்பு வெளியானது. கடந்த மார்ச் மாதம் துவங்கி தற்போது வரை  4 முறை தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 259 ஆக இருந்த தேர்வு  மையங்களின் எண்ணிக்கை, 185 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் பி.ஜி. மையங்களின் எண்ணிக்கை 31-லிருந்து 17 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு நீட் பி.ஜி. தேர்வர்கள் தாங்கள் விரும்பி விண்ணப்பித்த தேர்வு மையங்களுக்கு மாறாக, ஆந்திர மாநி லத்தில் மையங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வும் பாதிக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களும், மாற்றுத் திறனாளிகளும் இதில் பாதிக்கப்பட்டனர்.

எனவே, இதுபோன்ற தேர்வு மைய குளறுபடிகளை சரி செய்ய மக்களவையில் பேசியதோடு, ஒன்றிய பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை ஆர். சச்சிதானந்தம் எம்.பி. மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆலத்தூர் மக்களவை உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 

தமிழ்நாட்டைப் போலவே கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீட் பி.ஜி. தேர்வர் களுக்கும், கேரளம் அல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள் என்று நட்டாவிடம் முறையிட்டனர். 

அப்போது, நீட் பி.ஜி தேர்வு மைய குளறுபடிகளை உடனடியாக சரி செய்வோம் என்றும், தமிழ்நாடு, கேரள  தேர்வர்களுக்கு அவர்களது மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் நட்டா பதிலளித்துள்ளார்.