திண்டுக்கல், பிப்.21- நேஷனல் மாஸ்டர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கொல்கத்தாவில் பிப்ரவரி 14 முதல் 18ஆம் தேதி வரை ஐந்து தினங்கள் நடைபெற்றது. கொல்கத்தா, தில்லி, அசாம், ராஜஸ்தான், ஒரிசா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து 80 வீரர்கள் பங்கேற்றனர். தேசிய அளவில் நடைபெற்ற கோலூன்றி தாண்டுதல் தடகளப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் தங்க பதக்கத்தைவென்றார். திண்டுக்கல் மரிய நாதபுரத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அலெக் சாண்டர் என்ற அலெக்ஸ் என்பவர் இரண்டு மீட்டர் 80 சென்டி மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார். ஞானபாலன் என்பவர் இரண்டு மீட்டர் 40 சென்டிமீட்டர் உய ரம் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற முனீஸ்வரன் 43 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து வெண்கல பதக்கத்தை வென்றார். நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்டாலின் ஐந்து மீட்டர் 44 சென்டிமீட்டர் தூரம் தாண்டி ஆறாவது இடத்தை பிடித்து சாதனை படைத்து திண்டுக்கல் மாவட்டத்திற் கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்க உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டிலோ அல்லது புவனேஸ்வரத்திலோ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று வந்த வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திண்டுக்கல் நகர்க்குழு சார்பாக மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தார். நகரச்செயலாளர் எம். பிரேம்குமார், நகரத்தலைவர் ஏ.அஜீத், இந்திய மாண வர் சங்க மாவட்டச்செயலாளர் முகேஷ், மாவட்ட துணைச் செயலாளர் பி.தமிழ்செல்வன், ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக ஸ்டாலின் ஆகியோர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.