திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தனியார் பள்ளியில் மாணவிகளை சாதிய ரீதியாகப் பேசி தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும். தில்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களை தாக்கிய பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்களைக் கண்டித்தும் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தீபக்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜீவகன்,பகத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.