திண்டுக்கல், மார்ச் 27- திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் மாநகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
காலை 6.30 மணிக்கு 10-ஆவது வார்டு பகுதிகளான கருணாநிதி நகர், அய்யன்குளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் சச்சி தானந்தம் ஈடுபட்டார். நிகழ்விற்கு திமுக மாநகரச் செயலாளரும் துணை மேயருமான எஸ்.ராஜப்பா தலைமை வகித்தார்.
திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் பிலால், மாநகர அவைத்தலைவர் முகமது இப்ராகிம், துணைச்செயலாளர் அழ கர்சாமி, தெற்கு மண்டலத் தலைவர் ஜான்பீட்டர், வடக்கு மண்டலத் தலைவர் ஆனந்த், பொருளாளர் சரவணன், வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன், பொதுக்குழு உறுப்பி னர் அக்பர், இலக்கிய அணி அமைப்பா ளர் முருகானந்தம், மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளரும் மாமன்ற உறுப்பினரான அருள் வாணி, மற்றும் கவுன்சிலர்கள் விஜயா, சுபாஷினி, சுவாதி, காயத்ரி, பானுப் பிரியா, இந்திராணி, சரண்யா, கிருபா கரன், மற்றும் வார்டு செயலாளர்கள் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பிரபாகரன், நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார், சிபிஎம் கவுன்சிலர் கள் மாரியம்மாள், கே.எஸ்.கணே சன், ஜோதிபாசு, நகர்க் குழு உறுப்பி னர்கள் கிருஷ்ணன், தியாகு, மணி கண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநகர காங்கிரஸ் கட்சியின் தலை வர் மணிகண்டன், வடக்கு செயலா ளர் பரமசிவம், விசிக மாவட்டச் செய லாளர் மைதீன்பாவா, அன்பரசு, திருசித்தன், சிபிஐ நகரச் செயலாளர் ராஜாங்கம், மதிமுக சார்பில் செல் வேந்திரன், முஸ்லீம் லீக் சார்பாக தவ்பீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
காலை 7 மணிக்கு செல்லாண்டி யம்மன் கோவில் தெருவில் சச்சி தானந்தம் வாக்கு சேகரித்தார். அதன் பின்னர் 11 வது வார்டான லயன் தெரு, தாலுகா அலுவலக சாலை, காந்தி மார்க்கெட், அரசமர வீதி, வாணி விலாஸ் ரோடு, தாடிக்கொம்பு ரோடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
2, 3 வார்டுகளான செட்டிநாயக் கன்பட்டி வண்டிப்பாதை, ஆர்.எம்.காலனி நால்ரோடு ஆகிய பகுதி களில் வாக்கு சேகரித்தார். 4, 5 வார்டு பகுதியான ராமநாதபுரம் பகுதியி லும், 7-ஆவது வார்டான கோவிந்தா புரம் முருகன் கோவில், 9,8 வார்டுக ளான நந்தவன ரோடு, சந்தனத்தேவர் மில், சக்திவேல் கல்யாண மண்டபம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கி றார். 12-ஆவது வார்டான கிருஷ்ணா ராவ் தெருக்கள், சோனா டவர், நாராயண நகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். 6-ஆவது வார் டான பிள்ளையார் பாளையம் பகுதி யில் வாக்கு சேகரித்தார்.