districts

img

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூன் 17- நகர்ப்புற குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரின் ஊழியர் விரோத போக்கைக் கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று திண்டுக்கலில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் செல்வதனபாக்கியம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே. பிரபாகரன், மாவட்டச் செயலாளர் கே.ஆர். கணேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.முபாரக்அலி, மாநிலத்தலை வர் ரெத்தினமாலா, செண்பகம், இந்திரா, செல்லம்மாள், பழனியம்மாள், நித்யா, மகாலட்சுமி, தமிழ்செல்வி, சாலாட்சி, பத்மா, சுத்தராம்மாள், சுமதி, மலர்விழி, மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்வர்கள் கூறிய தாவது: நகர குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கோதையின் ஊழியர் விரோ தப் போக்கின் காரணமாக ஊழியர்கள் பலர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசு விதிகளுக்கு மாறாக மாலை 5 மணிக்கு மேல் கூட்டம் நடத்துவது, பணிச் சுமையை கூட்டுவது, விசிட் என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டுவது, கொத்தடிமை நடவடிக்கையில் ஈடுபடுவதால் திட்ட அலுவலரை பணி மாறுதல் செய்ய வேண்டும் என்றனர். (நநி)