districts

img

பரிசல் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு

தருமபுரி, டிச. 5- ஏரியூர் அருகே பரிசல் கட்டண  உயர்வை கண்டித்து, பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னா கரம் அடுத்த நாகமரை பரிசல் துறை  உள்ளது. இந்த பரிசல் துறையி லிருந்து சேலம் மாவட்டம் செல்ல  ஆற்றைக் கடந்த செல்ல வேண்டி உள்ளது. இதற்கு பரிசல் இயக்க  மூன்றாண்டுக்கு ஒரு முறை சேலம்  மாவட்டத்திற்கும் மூன்றாண்டுக்கு ஒரு முறை தருமபுரி மாவட்டத் திற்கும் டெண்டர் விடப்படுவது வழக்கம். சென்றாண்டு டெண்டர்  விடப்பட்டு ஒரு நபருக்கு 15 ரூபா யும் இருசக்கர வாகனத்திற்கு 30 ரூபாய் என வசூலித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு சேலம் மாவட்டம் கொளத்தூர் வட் டார வளர்ச்சி அலுவலகத்தில் டெண்டர் விடப்பட்டது.  இதில் ஒரு நபருக்கு 20 ரூபாயும் இருசக்கர வாகனத்திற்கு 40 ரூபாயும் என  கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப் பட்டது. சுற்றுவட்டார பகுதிகளான  ஏரியூர், நாகமரை, ஒட்டனூர், வத்த லாபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள  பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பரிசலை பயன்படுத்தி வரு கின்றனர். நாள்தோறும் படகு மூலம்  எதிர் கரையில் உள்ள கொளத்தூர்  வழியாக சேலம் மாவட்டத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். மேலும், பள்ளி கல்லூரி மாணவ  மாணவிகள் இவ்வழியாக தான் பய ணம் செய்து இரு நேரமும் சென்று வருகின்றனர். தினமும் சென்று வரும் சூழ்நிலையில் கட்டண உயர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகுவதுடன் தினக்கூலி அடிப் படையில் வேலைக்கு செல்லும்  வருமானமும், பரிசல் பயணத்தி லேயே இழக்க வேண்டிய நிலை  உள்ளது. மேலும் இதுகுறித்து அதி காரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. 

இதனால் ஆவேசமடைந்த மக்கள் நெருப்பூர் பேருந்து நிலை யம் அருகே சாலை மறியலில் ஈடு பட்டனர்.  தகவல் அறிந்து வந்த  ஏரியூர் காவல்துறையினர் மற்றும் பென்னாகரம் காவல் துணை கண் காணிப்பாளர் மகாலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த் தையில் உடன்படாத மக்கள் வட் டார வளர்ச்சி அலுவலர் வரும்  வரை சாலை மறியலை தொடர்ந்த னர். இதனை அறிந்த ஏரியூர் வட் டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். 

வருகின்ற 10 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச் சனையை சரி செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பின்னரே பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு  கலைந்து சென்றனர். இந்த சாலை  மறியலால் சுமார் 2 மணி நேரத் திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.