districts

img

சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் கை கோர்த்த மர்மம் என்ன?

தர்மபுரி, மார்ச் 30- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து வெள்ளியன்று மாலை நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பா.ஜ.க. என்பது சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி!  அப்படிப் பட்ட, பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு! ஆனால்,  சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் - சமூகநீதி பேசும் அய்யா ராமதாஸ் அவர்கள் எப்படி கூட்டணி வைத்தார்?

பாமக வலியுறுத்தும் ஒரு கொள்கை க்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க! இது, மூத்த தலைவரான மருத்துவர் ஐயாவுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மன சாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்ட ர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்! 

இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடி மக்களின் இட ஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாத கங்களை பா.ஜ.க. செய்திருக்கிறது… அதை மறந்துவிட்டாரா? பா.ம.க.வின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் அய்யா ராம தாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021-இல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது.

அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக் கெடுப்பையும் சேர்த்து நடத்தப் பாமக பாடுபடும் என்று சொல்கிறார்கள்! நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி அவர்கள் இப் போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா?

மோடி கேர ண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? அய்யா ராமதாஸ் அவர்கள் மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போ க்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பா.ஜ.க. இதைச் சொன்னால், நீங்களே ஏன் நடத்தவில்லை என்று நம்மை கேட்கிறார்!

நாம் மீண்டும் மீண்டும் சொல்வது, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அரசிய லமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டு, எடுக்கப்பட வேண்டியது! அதற் கான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது! மாநில அரசால் சர்வே தான் எடுக்க முடியும்! சென்சஸ் எடுக்க முடியாது! இந்த நடைமுறையெல் லாம் சமூகநீதிப் போராளியான அய்யா ராமதாஸ் அவர்களுக்கு தெரி யாது என்று நான் நினைக்கவில்லை! தெரிந்தே, இந்த அரசியலை நடத்து கிறார்! அவர் மேல் வைத்திருக்கும் பெரும் மரியாதைக்காக இதற்கு மேல், நான் எதுவும் பேச விரும்பவில்லை!  

இவ்வாறு அவர் பேசினார்.