districts

img

பாஜகவிடம் சரணாகதி அடைந்த அதிமுக, பாமக

தருமபுரி, ஏப். 11- தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  பென்னாகரத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார்.

வே.விசுவநாதன் முன்னிலை வகித்தார். வி.ரவி வரவேற்றார்.  இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தருமபுரி நாடாளுமன்ற தொகு தியில், திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி போட்டியிடுகிறார். இவர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. லட்சக்கணக்கான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதிமுக, பாமக ஆகிய வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடிப்பதற்கு போட்டியிடுகிறார்கள்.

 தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறது. மதச்சார்பின்மை, கூட்டாட்சிக்காக போராடுவோம், சமூகநீதிக்காக வாதாடுவோம் என தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணி நிற்கிறது.  எடப்பாடி பழனிச்சாமியோ, பாமகாவோ எங்கு நிற்கிறார்கள் என்பதே கேள்வி. பாஜகவிடமிருந்து நாங்கள் விலகிவிட்டோம் என்று சொல்லி தேர்தலை சந்தித்தாலும்  தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.

ஏனென்றால், அதிமுகவும், பாமகவும், பாஜகவிடம் சரணாகதி அடைந்த கட்சிகள் என்பதை மக்கள் அறிவார்கள்.  2014 இல், தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்றார் மோடி. தர வில்லை. கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன் னார். செய்யவில்லை. மோடி ஆட்சிக்கு வந்த போது பெட்ரோல் ரூ.66 ஆக இருந்தது, தற்போது ரூ.100 ஐத் தாண்டியுள்ளது.

ரூ.52 ஆக இருந்த டீசல் 94 ஆக உயர்ந்துள்ளது ரூ.410 ஆக இருந்த  சிலிண்டர் எரிவாயு தற்போது ரூ.1000 ஐத் தாண்டி யுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்தபோதும், அதன் பயன் மக்க ளைச் சென்றடையாமல் வரி மேல் வரி போட்டு மக்களை சுரண்டியதுதான் மோடியின் சாதனை.  மேலும், பாஜகவுடன் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித்துறையும் கூட்டணி சேர்ந்தி ருக்கிறது. இவர்களுக்கு நிதி கொடுக்காத நிறுவனங் கள் மீது இத்துறைகளை ஏவிவிட்டு நிதியை பெறு கின்றனர். ஊழலைக்கூட சட்டம்போட்டு கொள்ளை யடித்த கூட்டமாய் பாஜக உள்ளது. எனவேதான், மார்க்சிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூல மாக பாஜக செய்த மகா ஊழலை அம்பலப்படுத்தி யுள்ளது. இத்தகைய பிரச்சனைகளை திசை திருப்பத்தான் வகுப்புவாத நடவடிக்கைகளை மேற் கொள்கிறது மோடி அரசு.

 தென்னிந்தியாவைப்போல, வடமாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராக மக்கள் அணி திரள துவங்கிவிட்டார்கள். எனவே இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள், திமுக வேட்பாளர் ஆ.மணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெறவைக்க வேண்டும்” என்றார்.  இந்த கூட்டத்தில், திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, விவசாய தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் பி.என்.பி.இன்பசேகரன், தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ஏ.கே.தருண், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மூத்த தலைவர் இளம் பரிதி, சிபிஐ மாவட்டச் செயலாளர் கலைசெல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைத்தலை வர் டி.சி.‌தவமணி, திமுக பென்னாகரம் தெற்கு  ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் மற்றும் சிபிஎம் ஒன் றிய செயலாளர்கள் பென்னாகரம் கிழக்கு ஜி. சக்தி வேல், ஏரியூர் என்.பி.முருகன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில், நகர செயலாளர் வெங்கடா சலம் நன்றி கூறினார்.