districts

தலித் பெண் தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த 2 பேர் சிறையில் அடைப்பு

தருமபுரி, பிப்.10- விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற தலித் பெண் தொழிலாளர்களுக்கு கொட் டாங்குச்சியில் தேநீர் கொடுத்து, இழிவு படுத்திய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொ ரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா - ராஜலிங்கம் தம்பதியினரும், வேறு சமூ கத்தைச் சேர்ந்த சிவம் - சின்னத்தாய் தம்பதியினர் இணைந்து, அப்பகுதியி லுள்ள வேறு ஒருவரின் நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரு கின்றனர்.

இந்நிலையில், அவர்களது நிலத்தில் போளையம்பள்ளி கிரா மத்தைச் சேர்ந்த செல்வி, மாரியம்மாள், வீரம்மாள் ஆகியோர் வியாழனன்று விவ சாய கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, தலித் பெண் தொழிலா ளர்கள் குடிக்க தேநீர் கேட்டுள்ளனர். சிவம் - சின்னத்தாயின் மருமகள் தரணி என்பவர், வீட்டிலிருந்து தேநீர் எடுத்து  வந்து, சின்னத்தாயிக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் கொடுத்துள்ளார். மற்ற மூன்று தலித் கூலித்தொழிலாளர்களு க்கு கொட்டாங்குச்சி (தேங்காய் சிரட்டை) யில் தேநீர் கொடுத்துள்ளனர்.

இது குறித்து கூலித்தொழிலாளி செல்வி, நாக ரீகம் வளர்ந்த காலத்தில் கூட கொட்டாங் குச்சியில் தேநீர் கொடுக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியதற்கு, ஏளன மாகப் பேசியுள்ளனர்.  இச்சம்பவத்தை அறிந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் போளையம்பள்ளிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களி டம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர்.

இதையடுத்து சாதிப் பாகுபாடு பார்த்த சின்னதாய் மற்றும் அவரது மருமகள் தரணி ஆகியோர் மீது கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கம்பை நல்லூர் காவல் துறையினர், தலித் பெண் கூலித்தொழிலாளர்களிடம் சாதியப் பாகு பாடு காட்டிய சின்னத்தாய், தரணி ஆகி யோர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.