districts

img

உலக சிக்கன நாள்

உலக சிக்கன நாளையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சனூர், கோட்டூர், மணக்குடி, துகிலி திருக்கோடி காவல் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் ஒன்று முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், தனது சொந்த நிதியில் முதல் தவணையை செலுத்தி செல்வமகள் திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நவ.14 ஆம் தேதி நாச்சியார்கோயிலை சுற்றியுள்ள 5 ஊராட்சிகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.