districts

img

விளையாட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு

தஞ்சாவூர், செப்.13-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விளை யாட்டு போட்டியில் வென்ற மாணவி களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா நடை பெற்றது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேரா வூரணி குறுவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள், கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி ஏற்பாட்டில், பேரா வூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், பல்வேறு அரசுப் பள்ளி கள் கலந்து கொண்ட நிலையில், பேரா வூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். உதவி  தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வர வேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றி தழ்களை வழங்கி, சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் வாழ்த்திப் பேசினார்.  தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவியர் விடுதியில், உரிய வசதிகள் செய் யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

;