கும்பகோணம், ஏப்.28- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோட்ட பகுதிக்குட்பட்ட பாபநாசம், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கும்ப கோணம் கோட்டாட்சியர் லதா தலை மையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கும்பகோணம் கோட்ட பகுதிக்குட்பட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆனால், கோட்டாட்சி யரை தவிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வராததால் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட துணைச் செய லாளர் கணேசன், ஜீவபாரதி உள்ளிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியர் அனைத்து துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலைபேசியில் அழைத்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டித்து எச்சரிக்கை விடுத்தார். அதன்பேரில் கூட்டம் தாமதமாக நடைபெற்றது. கூட்டத்தில், விவசாய சங்கம் சார்பில் பாபநாசம் தாலுக்கா 54 காட்டு குறிச்சியில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நில அளவை செய்யும் நில அளவையர் பற்றாக்குறை இருப்ப தால் உடனுக்குடன் நிலத்தை அளந்து கொடுக்க நில அளவையர் நியமிக்க வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருவ ஆண்டில் பருத்திக்கு உட்கட்ட மைப்பு ஏற்படுத்திட வேண்டும் அறுவடை காலங்களில் கூடுதல் அறுவடை இயந்திரங்க ளை ஏற்பாடு செய்யவேண்டும் உரம் தட்டுப் பாட்டை நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு கோட்டாட்சியர் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயி களின் கோரிக்கை உடனே தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட தலைவர் செந்தில்குமார் தெரிவித்ததாவது விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் என்று சொல்லிவிட்டு சம்பந்தப் பட்ட அதிகாரிகள் வராதது கண்டனத் திற்குரியது. இனி அதிகாரிகள் இந்த தவறை செய்யக்கூடாது. விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.