தஞ்சாவூர், ஜூன் 26- தேவையான அடிப்படை வசதி களின்றி அவதிப்படும் சுப்பம்மாள் சத்திரம் மீனவ மக்களுக்கு ஆட்சி யர் உதவி செய்வாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சிக்கு உட்பட்டது சுப்பம்மாள் சத்திரம் கிராமம். இது, கிழக்கு கடற்கரை சாலையில் சேதுபாவா சத்திரத்தில் இருந்து, சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையை ஒட்டி அமைந் துள்ள மீனவக் கிராமம். இங்கு, சிறுபான்மை சமூகத்தின ரான 80 இஸ்லாமியக் குடும்பங் களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இவர் களில் ஒரு சிலர் பிழைப்பிற்காக வெளிநாட்டில் கூலித் தொழிலாளர் களாக வேலை செய்து வருகின்றனர். 40 பேர் நாட்டுப்படகுகளை வைத்து, மீன்பிடித் தொழில் செய்து வரு கின்றனர். மற்ற பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலாளர்களாக கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். சுப்பம்மாள் சத்திரம் மீனவர் குடி யிருப்பு பகுதியில் இருந்து கடற்கரை செல்லும் 1 கி.மீட்டர் நீளமுள்ள சாலை யில், பணிகள் முழுமையாக முடிவ டையாமல் பாதியில் நிற்கின்றன. இதில், சுமார் 500 மீட்டர் தூரம்வரை பாதை அமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இந்த பாதையை விரைந்து முழுமைப்படுத்தி தர வேண்டும். இங்குள்ள மீன்பிடி துறைமுகம் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. 40 நாட்டுப்படகுகளை நிறுத்தி வைக்க சரியான இடம் இல்லை. எனவே, கடற்கரையை தூர்வாரி படகு கள் நிறுத்துமிடம் அமைத்துத் தர வேண்டும். சில குடியிருப்பு பகுதி களில் மின் விளக்கு இல்லை. குடி யிருப்பு பகுதியிலிருந்து கடற்கரை வரை மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.
இப்பகுதியில் குடிநீர்த் தொட்டி ஒன்று உள்ளது. ஆனால் அது சுத்தம் செய்யப்படுவதில்லை. தொட்டியை சுத்தம் செய்து பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இங்கு, சாலை, குடிநீர், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் சனிக்கிழமை அப்பகு தியை ஆய்வு செய்து பொதுமக்களி டம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து நடந்த கட்சியின் கிளைக் கூட்டத்தில், “சுப்பம்மாள் சத்திரத்திற்கு என தனி மீனவர் சொசைட்டி ஏற்படுத்தித் தர வேண்டும். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர். மின் விளக்கு, சாலை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கடற்கரையை தூர்வாரி படகுகள் நிறுத்த ஏதுவாக தலம் அமைத்து தர வேண்டும். மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி யில் இருப்பதால் மீன்வளத்துறை, ஊராட்சி, அரசுத்துறை நிர்வாகங்கள் கவனிக்காத நிலை உள்ளது. 20 பேருக்கு மனைப்பட்டா கொடுக்கப் பட்டு அளவீடு செய்தும் வழங்கப்பட வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணித்து அடிப்படை வசதி இன்றி அல்லலுறும் மீனவ மக்க ளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையெனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில், இப்பகுதி மீனவ மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில், ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டம் நடத்து வோம்” என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.