தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் சக்கர நாற்காலி, கோவிலை தூய்மையாக வைத்துக்கொள்ள குப்பை தொட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதனை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பிரவீன், பொது மேலாளர் மரு.பாலமுருகன் மற்றும் மருத்துவ குழுவினர் வழங்கினர்.