districts

img

‘‘எது குற்றம்’’ நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர், ஜூன் 2 -  ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்கா ணிப்பாளர் குருவிக்கரம்பை க.மாணிக்க வாசகம் எழுதிய, ‘‘எது குற்றம்’’ நூல் வெளி யீட்டு விழா, செவ்வாயன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.  நூல் வெளியீட்டு விழாவுக்கு ஓய்வு பெற்ற கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.அன்புச் செல்வன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு வழக்குரைஞர் அ.குப்பு சாமி வரவேற்றுப் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் டி.ராஜா நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியர சர் எஸ்.நாகமுத்து நூல் அறிமுக உரை யாற்றினார்.  சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வீ.சிவஞானம் சிறப்புரையாற்றினார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் பாராட்டிப் பேசினார். நூலா சிரியர் க.மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றி னார். தி.மிர்ணாளினி நன்றி கூறினார்.  சமூக ஆர்வலர்கள் தம்பிக்கோட்டை ஆர்.கே.என்.வேதரெத்னம், ஆவணம் க.அடைக்கலம், கோயம்புத்தூர் எஸ்.பால சுந்தரம், சென்னை எஸ்.சீனிவாசன், இ.வீ. காந்தி, திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், கோயம்புத்தூர் என்.காசிநாதன், சென்னை க.சோமசுந்தரம், கே.கே.டி.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.  விழாவில், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), என்.அசோக்குமார் (பேராவூரணி), முன்னாள் ஒரத்தநாடு எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், தஞ்சாவூர் மேயர்  சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழ்நாடு தனி யார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.