திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலர் கோவி. அய்யா ராசு- மல்லிகா இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அய்யா ராசு இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் தமிழக முதல்வர் அளித்த மரக்கன்றினை நட்டு வைத்தார். இதில் அரசு கொறடா செழியன், எம்.பி கல்யாண சுந்தரம், எம்.எல்.ஏ அன்பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குட்டி தெட்சணாமூர்த்தி, லண்டன் குணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.