அய்யம்பேட்டை, நவ.27 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டையை அடுத்த ரெகுநாத புரத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 50 மாண வர்கள் படிக்கின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியி லுள்ள இரண்டு கட்டிடங்களில், ஒரு கட்டிடத்தை இடித்து விட்டனர். இத னால் இப்பள்ளியில் பயிலும் மாண வர்கள் இடநெருக்கடியால் தவித்து வரு கின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் கூறுகையில், “இப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தை இடித்து விட்ட னர். அது எப்போது கட்டப்படும் என தெரியவில்லை. மழைக்காலங்களில், மற்றொரு கட்டிடத்தின் மேற்கூரையில் நீர் கசிகிறது. இந்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும். இல்லையெனில், பழுது பார்க்கும் பணியை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், இப்பள்ளியின் காம்ப வுண்ட் சுவரில் ஒரு பகுதி இடிந்துள் ளது. அதையும் கட்டித் தர வேண்டும்” என்றனர்.