தஞ்சாவூர், டிச.20- தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் தாலுகா, வெண்டையம் பட்டி கிராமத்தில் தெற்கு காலனித் தெருவில் வசிக் கும் 15-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் மின்சார வசதி யின்றி, மின் விளக்கு இல்லா மல் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் நிலையில் இரவு நேரங்களில் அவர்கள் படிக்க முடியாத சூழல் உள் ளது. காலனித் தெருவின் தொடக்கப் பகுதியிலிருந்து நேராக கடைசி வரை மட் டுமே மின் கம்பம் அமைக்கப் பட்டு, அருகில் உள்ள வீடு களுக்கு மின்சார வசதி ஏற் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கிடையில் உள்ள வீதிகளுக்கு மின் கம்பங்கள் இல்லாததால், அங்குள்ள வீடுகளுக்கு மின் வசதி ஏற் படுத்த முடியாமல் உள்ளது. அதேபோல மின்கம்பம் உள்ள இடத்திலிருந்து, அந்த வீடுகள் நீண்ட தொலைவில் உள்ளதால் மின்கம்பியை கொண்டு செல்ல முடியா மல் அங்குள்ள மக்கள் தவிக் கின்றனர். மேலும், இரவு நேரங்களில் வெளியில் வரு வதற்குகூட பயந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், மழை, புயல் என அனைத்து இயற்கை இடர்பாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்க ளின் அடிப்படை தேவை களை பூர்த்தி செய்யும் வகை யில், தேவையான இடங்க ளில் உடனடியாக மின்கம்பங் கள் அமைத்து, மின்சார வசதி இல்லாத அந்தப் பகுதிக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிய ரைச் சந்தித்து நேரில் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநி லச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர், சிபிஎம் நிர் வாகிகள் மற்றும் வெண்டை யம்பட்டி கிளை இந்திய ஜன நாயக வாலிபர் சங்க நிர்வாகி கள் பொதுமக்களை ஆட்சிய ரிடம் அழைத்துச் சென்ற னர்.