கும்பகோணம், மார்ச் 19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 34 ஆவது வார்டில் போட்டி யிட்டு வென்ற சிபிஎம் கும்ப கோணம் மாநகராட்சி உறுப்பினர் ஆ.செல்வம் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உழைத்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரை பாராட்டி கௌரவிக் கும் சிறப்பு பேரவை கும்ப கோணம் சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது. கும்பகோணம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தேர்த லில் பணியாற்றிய அனை வரும் கௌரவிக்கப்பட்ட னர். சிபிஎம் மாவட்ட செய லாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, சிஐ டியு பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினரும் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரு மான எம்.சின்னதுரை சிறப்பு ரையாற்றினார். இறுதியில் கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆ. செல்வம் நன்றி கூறினார்.