தஞ்சாவூர், மே 26 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகில் இருந்த 300 வருட பழமை வாய்ந்த புளியமரம் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டது. அந்த இடம் பேருந்து நிறுத்தமாக உள்ளது. தற்போது புளியமரம் இல்லாத நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலுக்கோ, நிழலுக்கோ ஒதுங்க இடம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்