தஞ்சாவூர் தமிழ் பல்கலை., மேனாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான அவ்வை நடராசன் (87) காலமானதையொட்டி, செவ்வாயன்று தமிழ்ப் பல்கலை.,யில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலை பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வை நடராசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.