districts

மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

 தஞ்சாவூர், நவ.30-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார ரயில் பயனாளிகள் சங்க ஆலோ சனைக் கூட்டம் தலைவர் ஏ.மெய்ஞான மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.  செயலாளர் ஏ.கே.பழனிவேல், ஒருங்கிணைப்பாளர் பாரதி வை.நட ராஜன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், இராமேஸ்வரம் - சென்னை  வழித்தடத்தில் ஏற்கனவே இயங்கி, தற் போது நிறுத்தப்பட்டுள்ள விரைவு ரயிலை மீண்டும் தொடர்ந்து இயக்க வேண்டும். செகந்திராபாத் - இராமேஸ்வரம் விரைவு  ரயில் பேராவூரணியில் ஒரு நிமிடம் நின்று, பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்ய  வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;