districts

மே 4 போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், மே 1 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-4 தேர்வின் வாயிலாக 7,301 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிந்தன. தேர்வானது ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 4 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் தேர்வுக்கு தயார் செய்யும் விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.   மேலும், தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பானது அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு  நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.  இதுமட்டுமின்றி, ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வகுப்புகள் தனியே  நடத்தப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் தொடர்புக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் (04362-237037) தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

;