தஞ்சாவூர், அக்.7 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூ ரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற் குண்டான நிலுவைத் தொகை முழு மையாக வழங்கப்படும் என முத்த ரப்பு கருத்து கேட்புக் கூட்டத்தில் புதிய நிர்வாகம் வாக்குறுதி அளித் துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தலைமையில், திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய புதிய நிர்வா கம், கடன் வழங்கிய வங்கி அதிகாரி கள், கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு விவசாயி கள், “திருமண்டங்குடியில் திருஆரூ ரான் சர்க்கரை ஆலையில், கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடைய திற னற்ற நிர்வாக செயல்பாடுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். 2016-2018 ஆம் ஆண்டு கள் வரை விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகை, 2014-2018 ஆம் ஆண்டுகளில் கரும்புக் கான ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கிய ஊக்கத்தொகையை வட்டியுடன் புதிய நிர்வாகம் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கி களில் மோசடியாக வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். விவ சாயிகளுக்கு வங்கிகளில் கடன் இல்லா சான்றிதழ்கள் வழங்க வேண்டும். கடன் பெறாமலேயே விவசாயிகளின் பெயரில் உள்ள சிபில் ஸ்கோர் இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.
கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும். விவசாயி களுக்கு வழங்க வேண்டிய கரும்புக் கான தொகை அனைத்தையும் வழங்கிய பின்னர், புதிய நிர்வாகம் ஆலையில் பராமரிப்பு பணியை தொடங்க வேண்டும். இனி ஆலை நிர்வாகம் கரும்பு அரவை செய்தால் 15 தினங்களில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்” என வலியுறுத்திப் பேசினர். கூட்டத்தில் வங்கித் தரப்பில் அதி காரிகள் பேசுகையில், “இங்கு நடை பெற்ற கூட்டத்தின் பொருள் குறித்து வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும். அதுவரை விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் ஏதும் அனுப்பப்படாது” என்றனர். கூட்டத்தில் திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் நடேசன் கூறியதாவது: “இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கப்பட்டுள்ளது. விவ சாயிகளுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு தவணைகளாக வழங்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது. 7,452 விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டிய தில் இதுவரை 2,465 விவசாயி களுக்கு முதல் தவணை வழங்கப் பட்டுவிட்டது. இரண்டாவது தவணை தீபாவளி பண்டிகைக்குள் வழங்கப்படும். 2014 - 2018 ஆம் ஆண்டுகளில் ஊக்கத்தொகை 5,047 விவசாயிகளில் 2,170 விவசாயி களுக்கு வழங்கப்பட்டு விட்டது. மீத முள்ள விவசாயிகளுக்கும் வழங்கப் படும். அதேபோல் கரும்பு வெட்டி யதற்கான வெட்டுக்கூலி, போக்கு வரத்து வாடகை பாக்கி, கரும்புக் கான நிலுவைத் தொகை ஆகியவை முழுமையாக வழங்கப்படும்.
இந்த ஆலை கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததால், இயந்திரங்கள் பழுதாகிவிட்டன. மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர சுமார் ரூ.650 கோடி வரை செலவாகும். இதற்கான தொகையை வங்கியில் கடன் பெற்று தான் தொடங்க முடியும். அதுவரை விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இங்கு மீண்டும் ஆண்டொன் றுக்கு 8 லட்சம் டன் கரும்பு அரவை செய்யும் வகையில் அதன் செயல்பா டுகள் இருக்கும். அடுத்தாண்டு நவம்பர் மாதம் கரும்பு அரவை தொடங்க உள்ளது. எனவே விவ சாயிகள் கரும்பு பயிரிட முன் வர வேண்டும். விவசாயிகளின் பெயரில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை தொடர்பாக வங்கி அதிகாரி களிடம் பேசி சுமூக தீர்வு காண நட வடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசு கையில், விவசாயிகளின் கரும்புக் கான நிலுவைத்தொகையை வழங்க முன்வந்த நிர்வாகத்துக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். வங்கிக் கடன் தொடர்பாக தீர்வு காண விவசாயிகள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து, அதில் 7 பேர் கொண்ட விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்கிய வங்கியினர் இப்பிரச்ச னைகளுக்கு தீர்வு காணும் வரை விவசாயிகளுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்றார். கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின், கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் முனுசாமி, தலைமை நிதி அலுவலர் மணிகண்டன், கரும்பு உற்பத்தி ஆலோசகர் கந்தசாமி மற்றும் 300- க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவ சாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.