தஞ்சாவூர், பிப்.24- பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நட வடிக்கைக் குழு சார்பில் தஞ்சாவூர் வணிக வரித்துறை அலுவலகம் முன்பு, வியாழக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வணிக வரிப் பணியாளர் சங்க மாவட்டச் குமரேசன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் இரா.மதியழகன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் க.முருகானந்தம், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கோதண்ட பாணி, வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கோ.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 1000 துணை மாநில வரி அலுவ லர் பதவி உயர்வு தொடர்பான கோப்பை தனியாக பராமரித்து, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். தேவையற்ற அவசரம், கால அவகாசம் வழங்காமல் அறிக்கைகளை கோருவதை தவிர்க்க வேண்டும். இரவுக் காவலர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் ஆகிய காலிப் பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.