தஞ்சாவூர், ஜன.11- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழாவில், தெலுங்கானா ஆளுநரும், புதுச் சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்ரீதியாகபிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகு நாதன், மஹதி, கடலூர் ஜனனி, ஓ.எஸ்.அருண், அரித்து வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜா ராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வ லர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ் சலி செலுத்தினர்.
ஆளுநர் வருகை
முன்னதாக விழாவை தொடக்கி வைப்பதற்காக ஆளு நர் ஆர்.என்.ரவி செவ்வாயன்று தஞ்சாவூருக்கு வந்தார். ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உடனி ருந்தார்.