தஞ்சாவூர், ஜூன் 16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதனன்று பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தருமபுரம் ஆதீனத்தில் ஆளுநருக்கு என்ன வேலை? எதற்காக அங்கு சென்றார். ஆதீனம் எதற்காக ஆளு நரை அழைத்தார். ஆளுநருக்கு அங்கு என்ன வேலை. பட்டினப்பிரவேசம் எதற்கு? மனிதனை மனிதன் சுமக்கலாமா, கூடாது என்று தானே கை ரிக்சாவை ஒழித்து, சைக்கிள் ரிக்சாவை கலைஞர் கொண்டு வந்தார். கைபேசியில் உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கையில், பழமையின் மடியில், பத்தாம் பசலித்த னத்தின் பிடியில் சிக்கி, பட்டினப்பிரவேசம் என புறப்படுகிறீர்களே? கேட்டால் மரபு என்கிறீர்கள், முன்பு உடன் கட்டை ஏறினார்கள், இப்பொழுது ஏறுவீர்க ளா, பெண்களை பொட்டு கட்டி தேவதாசி ஆக்கினார்கள். மரபு தானே, செய்வீர்களா? பட்டினிப் பிரவேசம் நடத்த அனுமதி இல்லை என்று முடிவெடுத்தது கோட்டாட்சி யர், இதற்கும் முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு, அவரை ஏன் காயப்படுத்தினீர்கள்? ஆதீனகர்த்தர்கள், குருமகா சன்னிதா னங்கள் முதலமைச்சரை சந்தித்த போது, அவர்களிடம் முதல்வர், நான் சண்டைக்கும் வரவில்லை, சமருக்கும் வரவில்லை, உங்க ளுக்கு நியாயமானதாக தெரிந்தால் நீங்கள் இந்த ஆண்டு நடத்திக் கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு நடத்துவது குறித்து நாமே கூடிக் கலந்து பேசிக் கொள்ளலாம் என முதலமைச்சர் ஜனநாயகத்தின் உச்சியில் நின்று கொண்டு சொன்னார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ ஏனாதி ப.பாலசுப்பிரமணியன், ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்கள் திமுக முன்னணியினர், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.