districts

img

கரும்பு விவசாயிகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் நாகை மாலி  பேட்டி

கும்பகோணம், மார்ச் 9- ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளின் பெயரில் 200 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் வழங்காமல் ஆலை யை தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றகுழு தலைவர் என்ற முறையில் வருகிற இருபதாம் தேதி சட்ட மன்ற கூட்டத்தொடரில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று நாகை மாலி கூறினார். திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்கும் எனவும் போராட்டக் களத்தில் எவ்வித இடையூறுகள் வந்தாலும் போராட்டம் வெல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் ஆரூரான் சர்க்கரை  விவசாயிகள் சம்பந்தமான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் அமைச்சரிடம் வழங்கியும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இந்நிலையில் 100 நாட்களாக நடக்கும் தொடர் போராட்டத்தில் இன்றைய நூறாவது நாள் போராட்டத்தில்  தஞ்சை மாவட்டஆட்சியர் தனி கவனம் செலுத்தவில்லை என்பதை குற்றச்சாட்டாக கூறுகிறேன். இதற்கு முழுமையாக தஞ்சை  மாவட்ட ஆட்சியர் பொறுப்பு எடுத்து அரசு நடவடிக்கைக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.