தஞ்சாவூர், அக்.15- தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு தேங்கி கிடக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலை மையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தஞ்சாவூர் மாவட்டத் தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரு கிறது. அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடி யாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும், நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கும் அதிக மாக இருப்பதால் விவசாயி களிடமிருந்து நெல் கொள் முதல் செய்வதில் கடும் பிரச் சனை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சை அருகே ஆலக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தாங்கள் அறு வடை செய்த நெல்லை, ஆலக் குடி கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத் திற்கு கொண்டு வந்து காத் திருந்தனர். இந்நிலையில், நெல் கொள்முதல் பணி கள் மிகவும் தாமதமாகவே நடைபெற்று வந்ததாகவும், ஒரு நாளைக்கு 500 மூட்டைகள் மட்டுமே கொள் முதல் செய்யப்படுகிறது எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். வெள்ளிக் கிழமை, கொள்முதல் நிலை யத்திற்கு சுமைப் பணியா ளர்கள் வரவில்லை எனச் சொல்லி நெல் கொள்முதல் செய்யாமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து விவ சாயிகள் கடன் வாங்கி விவ சாயம் செய்துள்ள நிலை யில், கடனை அடைப்பதற் கும், தீபாவளிக்கு சில தினங் களே உள்ள நிலையில், குடும்பச் செலவுகளுக்கு பணம் தேவைப்படும் நிலை யில், நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் ஒன்றியச் செய லாளர் கோவிந்தராஜ் தலை மையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். சாலை மறியலில் சிபிஎம் கிளைச் செயலாளர் கலிய பெருமாள், விவசாயிகள் சங்க கிளைத்தலைவர் அசோக்குமார், விவசாயி கள் சங்க கிளைச் செயலா ளர் அன்பழகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்ட னர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த, நுகர் பொருள் வாணிபக் கழக உயர் அலுவலர்கள், வட்டாட்சியர், காவல்துறை யினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்ததை தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.