பொன்னமராவதி ஒன்றியம் நகரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம், இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, பொன்னமராவதி ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.