தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம், தோகூர் பேப்பர் மில் பகுதியில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, கணபதி சுந்தரம், செல்வம், பாப்பா, மங்கையர்க்கரசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் புதிதாக இணைந்தவர்களை, பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் கே.காந்தி ஆகியோர் வரவேற்று, கதராடை அணிவித்து, கட்சி அமைப்பு, செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். விரைவில் கிளை அமைப்பு கூட்டம், கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.