தஞ்சாவூர், ஜூன் 29- மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலிக் காட்சி வாயிலாக 5.1.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு இடங் களில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணத் தில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூரில் மன்னர் சர போஜி கலைக் கல்லூரி வளாகத்தில் நூல கம் மற்றும் அறிவுசார் மையம் சிறப்பாக செயல்படுகிறது. இம்மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தயார் செய்யும் வகையில் மாணவ, மாணவியர்கள் அமர்ந்து படித்திட இருக்கை கள், மேஜைகள், போட்டி உலகத்தில் அனைத்து தகவல்களையும் அறியும் வகையில் கணினிகள், அறிவு சார்ந்த செய்திகளைத் தரும் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கலந்துரையாடல் அரங்கு, மாணவர்களின் பொருட்கள் வைப்பறை, உணவருந்தும் மேசை போன்ற வசதி களுடன் நவீன முறையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் ஏராளமான இளைய தலைமுறையினர் சாதனை யாளர்களாக ஏற்றம் பெரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. இந்த நூலகத்திற்கு வருபவர்களுக்கு அடையாள அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். இம்மையத்திற்கு நாள்தோறும் சுமார் 200 மாணவ, மாணவியர்கள் அறிவை வளர்த்து ஆற்றல் வாய்ந்தவர்களாக மிளிர வருகின்றனர்.
இம்மையத்தில் பயிற்சி பெறுகிற தஞ்சாவூர் அண்ணா நகரில் வசிக்கும் சாந்தி, கணேஷ் நகர் சுமிசந்தியா, அம்மா பேட்டை ஜி.தினேஷ், மாரியம்மன் கோவில் எஸ்.சக்திவேல் ஆகியோர் தெரி வித்ததாவது: பள்ளி கல்லூரி படிப்பிற்குப் பிறகு போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்திட அரிய வாய்ப்பாகவும், அனைத்து வசதி களையும் கொண்ட அமுதசுரபி போன்று ஏராளமான புத்தகங்கள், கணினிகள், அடிப்படை வசதிகளுடன் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் எங்களைப் போன்ற வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்க்கையில் வெற்றியாளர்களாக எங்களை தயார்படுத்திட ஊக்கம் அளித்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.