மன்னார்குடி, ஏப்.1- தஞ்சாவூர் - மன்னார்குடி சாலைப் பணி விரிவாக்கம் நடை பெறும் பகுதிகளில் தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கும்பகோணம் கோட்டம் மற்றும் மன்னார்குடி உட்கோட்டம் மூலம் தஞ்சாவூர் - மன்னார்குடி மாநில நெடுஞ்சாலைக்கான (எஸ்எச்-63) சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணியை திட்டத்தின் தலைமைப் பொறியாளர் எம்.கே. செல்வன் ஆய்வு செய்து, பணியில் ஈடுபட்டுள்ள பொறியா ளர்களிடம் விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கி னார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை சென்னை - கன்னி யாகுமரி தொழிற்தடத்திட்ட கண்காணிப்புப் பொறியாளர் வி. செல்வநாதன், கோட்டப் பொறியாளர் செ.நாகராஜன், உதவிக் கோட்டப் பொறியாளர் அ.மாரிமுத்து. உதவி பொறியாளர் பா. வடிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.