districts

img

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தை தரமாக அமைக்க வேண்டும் வாலிபர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மார்ச் 12 - தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதா னத்தை தரமாக அமைக்க வும், முறைகேடில்லாமல், துரிதமாக செயல்படுத்த வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - இந்திய மாணவர் சங்கம் மற்றும் விளையாட்டு மைதா னத்தை பயன்படுத்தும் இளைஞர்கள் - பொது மக்கள் சார்பில், தஞ்சாவூர் கணபதி நகர் அன்னை சத்யா விளையாட்டு மைதா னம் வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரச் செயலாளர் யு. காதர் உசேன் தலைமை வகித் தார். வாலிபர் சங்க மாவட்டத்  தலைவர் ஆம்பல் துரை.ஏசு ராஜா, மாணவர் சங்க மாநில  துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.சர வணன், என்.குருசாமி ஆகி யோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜூன், வாலிபர் சங்கம் மாநகரத் தலைவர் ஹரிபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், “அன்னை சத்யா விளை யாட்டு அரங்கத்தில் நடைபெ றும் சர்வதேச ஓடுதளம் அமைக்கும் பணியில், உயர் நீதிமன்ற ஆணைப்படி வல்லு னர் குழுவை அமைத்து அதன் கண்காணிப்பில் செயல்படுத்த வேண்டும். பணிகளில் உள்ள தவறு களை சரி செய்ய வேண்டும்.  பணிகளின் திட்ட மதிப் பீட்டை அனைவரும் அறியும்  வகையில் வெளியிட வேண்டும். பொறியாளர்கள், உயரதிகாரிகள், தொழில் நுட்ப அதிகாரிகளின் ஆலோ சனைகள் பெற்று, பணிகள் முறையாக நடக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கால்பந்து மைதானத்தை குப்பைக் கழிவுகளைக் கொண்டு அமைக்காமல் தரமான மண் கொண்டு தளம் அமைக்க வேண்டும். பணி களைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற அதிகாரிகள், விளை யாட்டு வீரர்கள் கொண்ட  குழு அமைக்க வேண்டும்”  என வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பப்பட்டன.

;