districts

தஞ்சை அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஊழியர் கைது

தஞ்சாவூர், செப்.17 - அறுவை சிகிச்சைக்கு தயாராக மயக்க நிலையில் இருந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த மருத்துவமனை ஊழியர்  கைது செய்யப்பட்டார்.  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 56  வயதுடைய பெண் ஒருவர், வயிற்று வலி காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள் ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருந்த  நிலையில், அவருக்கு மயக்க மருந்து கொடுத் துள்ளனர். மேலும், இனிமா கொடுப்பதற்காக அங்கு வந்த மருத்துவமனை ஊழியர் ராபர்ட் எடிசன்(44) மயக்க நிலையில் இருந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.  அப்போது மயக்கத்தில் இருந்து சுதா ரித்துக் கொண்ட அந்த பெண், அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்துள்ளனர். இதனையடுத்து ராபர்ட் எடிசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  இதுகுறித்து அறிந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுதுரை அவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்தார். மேலும், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.  இந்நிலையில், அந்த பெண்ணின் மகன் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார்.   புகாரின் அடிப்படையில் ராபர்ட் எடிசன்  மீது 354, மற்றும் 354 (ஏ) ஆகிய இரு பிரி வின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

;