தஞ்சாவூர், மே 30 - தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருடப்படும் இரு சக்கர வாகனங்களை கஞ்சா விற்பனை, கொலை, வழிப் பறி போன்ற சம்பவங்களுக்கு குற்றவாளிகள் பயன்படுத்து வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர் நகர் பகுதியில், மருத்துவக் கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிகப்படியாக நடந்து வரு கிறது. இந்நிலையில், தஞ்சா வூர் கூடுதல் ஆட்சியராக (வருவாய்) பணியாற்றி வரு பவர் சுகபுத்ரா (38), ஐஏஎஸ் அலுவலரான இவர் மே 28 ஆம் தேதி தனது ஹோண்டா டியோ ஸ்கூட்டரை மருத்து வக்கல்லூரி சாலை, நடராஜ புரம் பகுதியில் உள்ள தனி யார் பள்ளி அருகே நிறுத்தி விட்டு, டென்னிஸ் விளை யாடுவதற்காக அங்கிருந்த திடலுக்கு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சுகபுத்ரா, மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் அளித்த புகா ரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.