districts

img

தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வேண்டியது அனைவரது கடமை சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேச்சு

தஞ்சாவூர், ஜன.29- தஞ்சாவூர் வெண்ணாற் றங்கரை நாவலர் ந.மு.வேங்  கடசாமி நாட்டார் திரு வருள் கல்லூரியில், தஞ்சை  மாவட்ட தமிழ்க் கல்வி இயக்  கம் சார்பில் தமிழ்வழிக் கல்வி  மூன்றாவது மாநாடு நடை பெற்றது.  இதில், பேரூர் திருமடம் தவத்திரு சாந்தலிங்க மரு தாசல அடிகளார் பேசுகை யில், ‘‘நிறைய பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் பயிலும்  மாணவர்களின் எண்ணிக் கையை விட, பல மடங்கு அதிகமாக ஆங்கில வழிக்  கல்வியில் பயில்வது பெருகி விட்டது.  அக்காலத்தில் எட்டாம்  வகுப்பு வரை தாய்மொழி யில்தான் கட்டாயக் கல்வி இருந்தது. ஆங்கிலம் கூடுத லாக ஒரு மொழிப் பாடமா கத்தான் இருந்து வந்தது.  இதில், கற்றுத் தேர்ந்தவர் கள்தான் அப்துல் கலாம் போன்ற அறிவியலாளர்கள், சான்றோர்கள். 1970 ஆம் ஆண்டுக்கு பின்பு ஆங்கிலக் கல்விக்கு அனுமதி கிடைக்கத் தொடங்கியது. தங்களது குழந்தைகள் ஆங்கில வழி யில் படித்தால்தான் வெளி நாடுகளில் வேலை கிடைக் கும் என்ற தவறான மயக்க நிலை பெற்றோர்களிடம் ஏற் பட்டது. இதன் விளைவாக படித்த கூலிகள், தொழில் நுட்பக் கூலிகள் என சொல் லக்கூடிய அளவுக்கு பெருகி யுள்ளது.
பொறியியல், மருத்துவம்  தாய் மொழியில்...
எனவே, தமிழ் வழிக் கல்வியை மீண்டும் எப்படிக்  கொண்டு வர வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும். இதற்காக பொறியியல், மருத்துவக் கல்வியை அந்  தந்த மாநிலங்களில் தாய்  மொழியில் கொண்டு வர அறி விக்கப்பட்டுள்ளது.  இதேபோல, தமிழகத்தி லும் நிறைய நூல்களை மொழியாக்கம் செய்வது, புதிய நூல்களை உருவாக்கு வது என்ற அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தொடங்குவதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறைய முயற்சி செய்தார். இப்போ தைய அரசும் தொடர்ந்து செயல்படுகிறது. தமிழ்வழியில் மருத்து வம், பொறியியல் படிக்க மாணவர்கள் முன்வராததே இதற்குக் காரணம். ஆனால்,  ஜெர்மனி, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் பொறி யியல், மருத்துவத்தைத் தங்க ளது தாய்மொழியில்தான் கற்கின்றனர். கர்நாடகம் போன்ற  அண்டை மாநிலங்களில் தாய்மொழிக் கல்வியில் உறு தியாக இருப்பது போன்று நாமும் தமிழ்வழிக் கல்வி யை முன்னெடுத்துச் செல்ல  வேண்டும். தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வேண்டிய கடமையைச் செய்வதில் நாம் உறுதியாக இருந்தால் தான் தமிழ்வழிக் கல்வி கனவு நனவாகும்’’ என்றார். முன்னதாக, மருத்துவர் சு.நரேந்திரன் எழுதிய தமிழ்  வழிக் கல்வி கனவா? நனவா?  என்ற நூலை அடிகளார் வெளியிட, அதை மருத்து வர் இரா.இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.