தஞ்சாவூர், டிச.18- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையும், பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்த மம்) மற்றும் இந்திய மொழிகளின் நடு வண் நிறுவனம், மைசூர் ஆகியவை இணைந்து நடத்திய 21-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா சனிக்கிழமை பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது. நிறைவு விழாவில் கலந்து கொண்ட தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கே.சரவணகுமார் ஆற்றிய சிறப்புரையில், “தமிழும் கணினியும் ஒன்றாக இணைய வேண்டும். தற்போது, கணினி இல்லை என்றால் தமிழ் வளர முடியாது என்ற சூழல் எழுந்துள்ளது. பல்வேறு நாடுகளில் பிறந்து வளர்ந்த உங்களையும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த எங்க ளையும் இந்தத் தமிழ் இணைய மாநாடு ஒன்றாக இணைக்கிறது. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் இன்றைய காலகட்டத் தில் கணினியின் வளர்ச்சி நம்மை ஓரி டத்தில் இருப்பது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது” என்றார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் துணை வேந்தர் பேராசிரியர் சே.வேலு சாமி, தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளு வன் ஆகியோர் தலைமை உரையாற்றி னர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் தலைவர் தவரூபன் தங்கராஜா, பாரீஸில் உள்ள இந்தியத் தேசிய அறிவியல் உயராய்வு மையத் தின் பேராசிரியர் அப்பாசாமி முரு கையன், அமெரிக்கா பென்சில்வே னியா பல்கலைக்கழக பேராசிரியர் வாசு ரெங்கநாதான் ஆகியோர் பேசினர். முன்னதாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவ னத்தின் பதிவாளர் முனைவர் ஸ்ரீவித்யா வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சி.தியாகராஜன் நன்றி கூறினார்.