தஞ்சாவூர், ஜூலை 26 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணி கண்டன் (21) புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஐடிஐ ஒன்றில் படித்து வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீர மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், இவரது நண்பர் மஞ்சு நாதன் (19). இந்நிலையில் திங்கள்கிழமை கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த தேரோட்ட திருவிழாவிற்காக மஞ்சுநாதன் வீட்டிற்கு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள, தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வேம்பங்குடி - பைங்கால் வீரமாகாளியம்மன் கோயில் குளத்தில் குளித்தனர். இதில் நீச்சல் தெரியாத தால் மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக் காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.