districts

மாணவர் பேரவை  தொடக்க விழா

குடவாசல், மார்ச்.25-  குடவாசல் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி மாணவர் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.மாரிமுத்து தலைமை தாங்கினார். திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முதல்வர் கோ.கீதா சிறப்புரையாற்றினார். வணிகவில் துறைத்தலைவர் க.தேஷ் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் புவநேந்திரன் நன்றி கூறினார். இதில், கணிதத் துறைப் பேராசிரியர் ஜோ.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் வே.ரமேஷ்குமார், கல்லூரி மாணவர்கள் ஆர்.பிரவிகா, எஸ்.மருதையன், பேராசிரியர்கள் அ.சுரேஷ், தி.குமார், நிதியாளர் சாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

;