districts

img

திருப்பனந்தாளில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்

கும்பகோணம், அக்.27- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்றது. முகாமிற்கு மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் தலைமை தாங்கினார். திருப்பனந்தாள் ஒன்றியக் குழு தலைவர் தேவி ரவிச்சந்தி ரன், ஒன்றியன் குழு துணை தலைவர் கோ.க.அண்ணா துரை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர் கலைவாணி சப்பாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தலைமை அரசு கொறடா கோவி. செழியன் கலந்து கொண்டு பேசினார். முகாமில் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் சின்னதுரை, திமுக பிரதிநிதிகள் மிசா மனோகரன், குமார், சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு, ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், மகேஸ்வரி அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.