districts

அதிராம்பட்டினம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

தஞ்சாவூர், மார்ச் 1 - தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பேரூராட்சியாக இருந்து நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அதிராம் பட்டினம் நகராட்சியில், ரூபாய் ஒரு கோடியே 18 லட்சம் மதிப்பில், திடக்கழிவு  மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பை களை முறையாக அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.  மேலும், ரூ.45 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் அருகே பட்டுக் கோட்டை சாலையில் மழைநீர் வடிகால்  வாய்க்கால் அமைக்கும் பணிகளையும்  பார்வையிட்டார். தொடர்ந்து அதிராம் பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், கரையூர் உயர்நிலைப் பள்ளியிலும் மாணவர்களுக்கு வழங்கப் படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளிக் கட்டிட பாதுகாப்பு, கழிப்பறை வசதி, சுகாதாரம் குறித்தும் ஆய்வு நடத்தினார். பின்னர், பொதுமக்களிடம் அரசு உதவித்தொகை, அங்காடிகளில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படுகிறதா எனக் கேட்ட றிந்தார்.