districts

img

பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் பட்டுக்கோட்டை சிபிஎம் வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

தஞ்சாவூர், பிப்.7 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சித் தேர்தலில் வார்டு எண் 22 இல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.ஆர்.செந்தில்குமார் அரி வாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது,  “பட்டுக்கோட்டை நகருக்கு பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டு வர குரல் கொடுப்பேன். தெருக்களில் கூடுதலாக குப்பைத்தொட்டி அமைக்கவும், தூய்மைப் பணியாளர்களை அதிகப்படுத்தி, தினசரி குப்பைகளை அள்ளி சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்வேன். நூலகம் அமைத்து தருவேன். பூங்காவை சீரமைத்து தரு வேன்” என்று தெரிவித்தார்.  வாக்குச் சேகரிப்பின் போது சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரெ.ஞான சூரியன், முருக.சரவணன், மோரிஸ் அண்ணா துரை மற்றும் கே.செந்தில், மாதவன் ஆகி யோர் உடனிருந்தனர்.

;