தஞ்சாவூர், பிப்.5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை முன்னாள் ஒன்றியச் செய லாளரும், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினருமான, மூத்த தோழர் நம்பிவயல் அய்யாவு (80) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக் கிழமை காலமானார். பட்டுக்கோட்டை தாலுகா வில் முன்னணி கட்சி ஊழியராக வும், கட்சி நடத்திய பல்வேறு போ ராட்டங்களில் பங்கேற்றவருமான, அய்யாவுக்கு மனைவி அஞ்சம் மாள், மகன்கள் பகவதி முருகன், பாரதிதாசன், மகள் கீதா ஆகியோர் உள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மூத்த தோழர் ஆர்.சி.பழனிவேலு, ஆர். காசிநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், எஸ்.தமிழ் செல்வி, எம்.செல்வம், பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் சா.ஜீவபாரதி, கே.ராம சாமி, வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு உள்ளிட்ட பலர் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.