districts

பட்டுக்கோட்டையில் அறிவியல் கண்காட்சி

 தஞ்சாவூர், மார்ச் 27 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் 2021-22 ஆம்  ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  இக்கண்காட்சியை பட்டுக் கோட்டை மாவட்ட கல்வி அலுவ லர் கு.திராவிடச் செல்வம் சனிக் கிழமை துவங்கி வைத்தார். பட்டுக் கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்  ஏ.சக்தி வேல்,  நாட்டுச்சாலை அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமையா சிரியர் சி.தெட்சணாமூர்த்தி  முன்னிலை வகித்தனர்.   கண்காட்சியில் 260 மாதிரிகள், அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்  கல்வி கண்காட்சி தலைப்புகளில்  13 அறைகளில் காட்சிப்படுத்தப் பட்டன. இப்பள்ளி மாணவர்கள் 2,600 பேர், பட்டுக்கோட்டை கண்டி யன் தெரு நடுநிலைப்பள்ளி, முஸ்லிம் தெரு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 3,500-க்கும் மேற்பட்டோர் கண்காட்சியை கண்டு களித்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று  இடங்களை பிடித்த 21 மாணவர்க ளுக்கு அவரவர்கள் புகைப்படத் துடன் கூடிய கேடயங்கள் வரும் வார த்தில் வழங்கப்பட இருக்கிறது.

;