districts

img

ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியத்தை மாநில-இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குக! ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 22 - தன் பங்கேற்பு ஊதியத்தை ரத்து  செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு இணை யான ஊதியத்தை மாநில-இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்கிய 3 சதவீத பஞ்சப் படியை மாநில அரசின் ஊழியருக்கு ஜனவரி முதல் வழங்க வேண்டும். சரண்டர் விடுப்பு ஒப்படைப்புக்கான தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலந் தழு விய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திருவிடைமருதூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் வேணி தலைமை வகித்தார். வட்டார துணைத் தலைவர் கேசவன், வட்டாரச் செயலாளர் காளிதாசன், துணைச் செயலாளர் மோகன் ஆகியோர்  கோரிக்கையை விளக்கி பேசினர். வட்டாரப் பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
வேதாரண்யம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

;